சிதம்பரத்திற்கு ஜாமீன்

சிதம்பரத்திற்கு ஜாமீன்

Share it if you like it

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  சிதம்பரத்திற்கு எதிராக  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ பின்னர் அவரை திகார் சிறையில் அடைத்தது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நூறுநாட்களுக்கு பின்னர் சிதம்பரம் சிறையில் இருந்து வெளியேவர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it