சீனாவுக்கு எதிராக சென்னை சிறுவனை களமிறக்கிய மத்திய அமைச்சர் – ஊடகம் மறைத்த உண்மை

சீனாவுக்கு எதிராக சென்னை சிறுவனை களமிறக்கிய மத்திய அமைச்சர் – ஊடகம் மறைத்த உண்மை

Share it if you like it

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி சீனாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா, சீனாவின் லியூ யானைத் தோற்கடித்துள்ளார். இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற ஐந்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவை 7-ம் இடத்தில் உள்ள இந்தியா தோற்கடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் விளையாடிய 9 ஆட்டங்களில் 8-ல் இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சென்னையை சேர்ந்த சிறுவன் ப்ரக்ஞானந்தாவுக்கு அனைத்துவிதமான செலவுகளையும் செய்தது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில் ” எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்த நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு நன்றி. சீனாவை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம்” என கூறியுள்ளார்.


Share it if you like it