சீன அமைச்சருடன் பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

சீன அமைச்சருடன் பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

Share it if you like it

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கீ அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து பேசியதாக கூறப்படுகின்றது. இந்திய, சீன எல்லையானது 3,500 கிலோமீட்டர் நீளம் உடையது.

இந்தியா, சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை உள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா தன்னுடைய பிராந்தியம், தெற்கு திபெத் என கூறிவருகிறது. கடந்த ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை குவித்தது. பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பின்னர் படைகள் பின்வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.


Share it if you like it