சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு அளித்த சிறுவன் – ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம் !

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு அளித்த சிறுவன் – ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம் !

Share it if you like it

  • பல மாநிலங்களில் கொரோனா நோய் கிருமியை தடுப்பதற்காக அம்மாநில முதல்வர்கள் மக்களிடம் நிதி அளிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ஆந்திர பிரதேசத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் 4 வயது ஹேமந்த் என்ற சிறுவன் தான் புது சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காக வைத்திருந்த 941 ரூபாய் பணத்தை ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகத்தில் மாநில தகவல் தொடர்பு துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையாவிடம் வழங்கி அந்த பணத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொடுத்து கொரோனா நிதியில் சேர்த்து விடுங்கள் என்று அச்சிறுவன் கூறியுள்ளான்.

  • உலகளாவிய மனிதாபிமான நெருக்கடியின் போது சிறுவனின் மனிதாபிமான செயலை கண்டு அச்சிறுவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, ஹேமந்திற்கு சைக்கிள் வாங்குவதாகவும் உறுதியளித்தார். இந்த சம்பவம் அதிகாரிகளை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Share it if you like it