சோனியா காந்தி போராட்டம்

சோனியா காந்தி போராட்டம்

Share it if you like it

மஹாராஷ்டிராவில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா அரசியலில் தினம் ஒரு திருப்பமாக திரைப்படத்தை மிஞ்சும் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. இதற்கிடையில் பா.ஜ.க வின் தேவேந்திர பட்னவிஸ்க்கு முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்து அஜித் பவாருக்கு துணை முதல்வராகவும், மஹாராஷ்டிரா ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share it if you like it