டெல்லியில் மீண்டும் கலவரம்

டெல்லியில் மீண்டும் கலவரம்

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று டெல்லி ஜஃப்ராபாத், சீலம்பூர் பகுதியில் போலீசார் கலவரக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கலவரக்காரர்கள் போலீஸ் மீது கற்களை வீசினர், மேலும் காவல்துறையினரின் தடிகளை பிடுங்கி தனியாக சிக்கிய காவலர்களை கொடூரமாக தாக்கினர், கலவரக்காரர்கள் அரசு பேருந்து, தனியார் வாகனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கலவரம் காரணமாக டெல்லி சீலம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


Share it if you like it