தப்லீகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட மும்பையை  சேர்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் பலி !

தப்லீகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட மும்பையை சேர்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் பலி !

Share it if you like it

  • மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தாராவி என்ற பகுதியில் 56 வயதான ஒரு நபர் கொரோனா நோய் தொற்றால் அரசு நடத்தும் சியோன் மருத்துவமனையில் இறந்துள்ளார். அவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. தாராவியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். தாராவியில் சமூக தொலைவு நடைமுறையில் சாத்தியமற்றது. பலியானவர் டாக்டர் பாலிகா நகர் எஸ்.ஆர்.ஏ சொசைட்டியில் வசிப்பவர், அதில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. அருகிலுள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் 90 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் முத்திரையிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பலியானவரின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • மேலும் மற்றொரு நபரும் அதே பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாக கூறப்படுகிறது. இந்த நோயாளிக்கு பயண வரலாறு ஏதும் இல்லை. அவரைப்பற்றிய விபரங்கள் விரைவில் வழங்கப்படும் ”என்று மும்பை மாநகராட்சியின் (எம்.சி.ஜி.எம்) மக்கள் தொடர்பு அதிகாரி விஜய் கபாலே-பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Share it if you like it