தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணியிடம் கெடுபிடி காட்டி அராஜகத்தில் இறங்கிய தி.மு.க அரசு..! 

தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணியிடம் கெடுபிடி காட்டி அராஜகத்தில் இறங்கிய தி.மு.க அரசு..! 

Share it if you like it

75-வது சுதந்திர தினம் பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கிளை பரப்பி இருக்கும் இந்தியர்களால் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பா.ஜ.க உட்பட தமிழகத்தில் உள்ள பல முன்னணி கட்சிகள் பல இடங்களில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேச உணர்வை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதே போன்று இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேச உணர்வை வெளிப்படுத்த முற்பட்ட பொழுது தி.மு.க அரசு பல இடங்களில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தேசிய கொடியை ஏற்ற அனுமதி வழங்காமல் அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் முருகர் கோவில் பஜார் வீதி அருகில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர்  இளவரசன் தடை விதித்தது மட்டுமில்லாமல் கொடி கம்பத்தை அகற்றி இந்து முன்னணி  பொறுப்பாளர்களை கைது செய்து உள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் இது போன்ற அராஜக செயலில் தி.மு.க அரசு ஈடுபட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it