தமிழக பெண்களை இழிவுப்படுத்திய தி.மு.க ஆபாச பேச்சாளரை கண்டிப்பார்களா தோழர்கள்?

தமிழக பெண்களை இழிவுப்படுத்திய தி.மு.க ஆபாச பேச்சாளரை கண்டிப்பார்களா தோழர்கள்?

Share it if you like it

தி.மு.க தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து அண்மையில் திண்டுக்கல் ஜ.லியோனி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் அப்பொழுது அவர் கூறியதாவது.

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாக கிண்டல் செய்து உள்ளார். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொள்வான்.

முன்பு எல்லாம் பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது. வெளிநாட்டு பாலை  பாலை குடித்ததால்., இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது,  பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக பேசியுள்ளார் லியோனி.

எதற்கெடுத்தாலும் மத்திய, மாநில, அரசுகளுக்கு எதிராக மெழுவர்த்தி ஏந்தும் கனிமொழியோ, அல்லது தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் சுந்தரவள்ளியோ. தமிழக பெண்களை இழிவுப்படுத்திய ஆபாச பேச்சாளர் லியோனியை கண்டிக்காமல் மெளனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கருத்து கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it