தமிழக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் திமுக..! தற்பொழுது புதிய சர்ச்சை கிளப்பிய- பி.டி.ஆர்!

தமிழக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் திமுக..! தற்பொழுது புதிய சர்ச்சை கிளப்பிய- பி.டி.ஆர்!

Share it if you like it

அண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பிச்சை போட்டதே திமுக தான்  என்று ஆர்.எஸ். பாரதி இழிவுப்படுத்தி பேசியிருந்தார். சமீபத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதை தமிழர்கள் இன்று வரை மறக்கவில்லை. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு நிவாரண பொருட்களை ஏழை பெண்ணிடம் தூக்கி போட்டு மிரட்டிய காணொலி மக்களின் மனதை கடுமையான ரணத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்.

மீண்டும் ஒரு சம்பவமாக  திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் முடி திருத்தும் நபர்களை அம்பட்டையன் கடை என்று மிகவும் அருவருக்கதக்க வகையில் பேசியிருக்கும் காணொலி மீண்டும் தமிழக மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை ஸ்டாலினோ அதன் கூட்டணி கட்சி தலைவர்களோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று நெட்சன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it