தமிழின்  மேன்மையை தொடர்ந்து ஒலிக்கும் மோடி!

தமிழின் மேன்மையை தொடர்ந்து ஒலிக்கும் மோடி!

Share it if you like it

மாதம் ஒருமுறை மக்களிடம்  நாட்டின் வளர்ச்சி பற்றியும், அவர்களின் பங்களிப்பின் மூலம் நாட்டை எப்படி  மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லலாம்  என்று அவர்களுக்கு  தன் அனுபவத்தை வானொலியில் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சியாக மனதின் குரல் நடைபெறுகிறது.

பாரத பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும் பொழுது  திருக்குறளையும், பாரதியாரின் கவிதைகளில் இருந்தும் ஆழமான கருத்தினை சுட்டிக்காட்டி மக்களிடம் உறையாற்றுவார். இந்நிலையில் மீண்டும் மக்களிடம்  மனதின் குரல் மூலம் பேசும்பொழுது

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலக அளவு என்று அவ்வையாரின் அமுதமொழியினை மேற்கொள்காட்டி, உரையாற்றி இருப்பதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் பெருமையையும்  பாரதம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது திண்ணம்.


Share it if you like it