“தலித்” என்ற புத்தகத்தை வழங்கிய வி.சி.க எம்.பி ..! “நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன்” என்ற புத்தகத்தை பதிலுக்கு வழங்கிய மா.வெ..!

“தலித்” என்ற புத்தகத்தை வழங்கிய வி.சி.க எம்.பி ..! “நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன்” என்ற புத்தகத்தை பதிலுக்கு வழங்கிய மா.வெ..!

Share it if you like it

தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையர் மா.வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் (26-8–21) விழுப்புரம் மாவட்டத்தில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற வி.சி.க கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்கள் தான்  ஆசிரியராக இருக்கும் “தலித்” என்ற புத்தகத்தை மா.வெங்கடேஷ் அவர்களுக்கு பரிசாக அளித்து உள்ளார். இதற்கு மா.வெ அவர்கள் தான் எழுதிய “நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன்” என்ற புத்தகத்தை எம்.பிக்கு பரிசாக அவருக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it