தாழ்த்தப்பட்டோர் போல ஒரு நிமிடம் நடத்தியதற்கே தயாநிதிகளுக்கு இந்த கொதிப்பு…எங்களுக்கு எப்படி இருக்கும்- ஷியாம் கிருஷ்ணசாமி!

தாழ்த்தப்பட்டோர் போல ஒரு நிமிடம் நடத்தியதற்கே தயாநிதிகளுக்கு இந்த கொதிப்பு…எங்களுக்கு எப்படி இருக்கும்- ஷியாம் கிருஷ்ணசாமி!

Share it if you like it

அண்மை காலமாக திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய சென்னை எம்.பி யுமான தயாநிதி மாறன் பேச்சு நாளுக்கு நாள் எல்லை மீறி வருவதாக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நிவாரண நிதியாக அள்ளி வழங்காமல் கிள்ளி வழங்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில். அண்மையில் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார்.

தற்பொழுது பட்டியல் இன மக்களின் மனம் புண்படும்படி பேசி இருப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், புகார்களும் தயாநிதி மாறன் மீது குவிந்து  வருகிறது.

இந்நிலையில் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்டோர் போல ஒரு நிமிடம் நடத்தியதற்கே தயாநிதிகளுக்கு இந்த கொதிப்பு.. அப்போ இட ஒதுக்கீடு ‘பிச்சை’ போடுகிறோம் என்று நிரந்தரமாக இதே தாழ்த்தப்பட்ட நிலையில் SC, தலித், ஹரிஜன் என்று வைத்திருக்க நினைக்கும் போது எங்களுக்கு எப்படி இருக்கும்?


Share it if you like it