தினத்தந்தி மறந்ததா..! மறைத்ததா..!- பாஜகவினர் குற்றச்சாட்டு

தினத்தந்தி மறந்ததா..! மறைத்ததா..!- பாஜகவினர் குற்றச்சாட்டு

Share it if you like it

நேற்று 23.12.19 அன்று தினத்தந்தி பத்திரிகையில் ”சரிவை சந்தித்து வரும் பாஜக” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சிக்கிம், கோவா போன்ற மாநிலங்களை குறிப்பிட மறந்து அவற்றை ஆட்சி இழந்த மாநிலங்களில் சேர்த்துள்ளனர்.
மேலும் ஆட்சி இழந்த மாநிலங்களான மத்திய பிரதேசம், ஜார்கன்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது கூட்டணி காரணங்களுக்காகத் தான் ஆட்சி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இந்த அரசின் மீது எந்த ஊழல் குற்ற சாட்டுகளும் சுமத்த முடியாததால் பத்திரிகை துறையில் பணிபுரியும் பிற அரசியல் கட்சி உணர்வு சார்ந்தவர்கள் இதுபோன்ற தருணங்களில் ”வடக்கில் பாஜக ஈர்ப்பு குறைந்து வருகிறதாக” இவர்கள் செய்தி வெளியிட்டு மக்களின் மத்தியில் பாஜக வெறுப்பு மனநிலையினை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்று பாஜக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.


Share it if you like it