தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வரும் மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்!

தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வரும் மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் ஊரடங்கு, உத்தரவை அடுத்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, VHP, இன்னும் பல சமூக தொண்டு நிறுவனங்கள் ஏழை எளியவர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர்.

ஊரடங்கு என அறிவித்த, நாளில் இருந்து இன்று வரை சுவாமிகள், பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கிறார். ஶ்ரீரங்கம் மடத்தில், தினமும் மூன்று வேளை சுவையான உணவு தயார் செய்யப்பட்டு. தொண்டுள்ளம் கொண்ட, அன்பர்கள் மூலம் ஏழை, எளியவர்களின், இருப்பிடங்களுக்கே சென்று உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.

தினமும் சுவாமிகள், இரவு நேரங்களில் உணவு, விநியோகத்தில் ஈடுபட்டும் வருகின்றார். இரவு 7 மணிக்கு மேல், தனது வாகனத்தில் உணவு பார்சல்களுடன், கிளம்பி முக்கிய வீதிகளில், உள்ள ஆதவற்றோர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் இப்புனித தொண்டை செய்து வருகின்றார்..

சாலை ஓரங்களில், உள்ள கைவிடப்பட்டோர், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், என அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது..அரசு மருத்துவமனையில் உள்ள, நோயாளிகளுக்கும் அவர்களின், உதவியாளர்களுக்கும் தினமும் உணவுகள் வழங்கப்படுகிறது.

காலை, மாலை, இரவு, என மூன்று வேளையும் சேர்த்து. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான, பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் மாஸ்க் மற்றும் இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறார் சுவாமிகள்..வழக்கம் போல் நாத்திக, கம்யூனிஸ்ட்கள், சில்லறை போராளிகள், இவர்களை விமர்சனம் செய்து கொண்டே, தங்களது நேரத்தை கழித்து, வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் குதித்த சிதம்பரம் நடராசர் கோயில் அர்ச்சகர்கள்.

Share it if you like it