திமுகவை தொடர்ந்து  கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய..! கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்..!

திமுகவை தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய..! கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்தது. அதன் விளைவாக தற்பொழுது இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுள்ளனர். பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாக இவை பார்க்கப்படுகிறது.

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கடுமையாக விமர்சிப்பதையே தனது தொழிலாக கொண்டு வாழும் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் திரு. அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

கோடிகணக்கான மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாக இருக்கும் முருகனையும், பக்தி பாடலையும், ஒரு சாதாரண நடிகருடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டு இருக்கும் அருணன். ஹிந்துக்களின் உணர்வுகளை நாங்கள் என்றும் மதிக்க மாட்டோம் என்பதை காட்டுவது போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it