திமுகவை மறைமுகமாக சாடிய திருமாவளவன்…! நீடித்து நிற்குமா கூட்டணி?

திமுகவை மறைமுகமாக சாடிய திருமாவளவன்…! நீடித்து நிற்குமா கூட்டணி?

Share it if you like it

1999 July 23”- அன்று ஊதிய உயர்வு பெற்றுவிட்டுத்தான் ‘ஊர்’ திரும்புவதென்று போராட வந்த மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது திமுக அரசு தனது கோர முகத்தை காட்டியதன் விளைவாக தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17-பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். தமிழகம் முழுவதும் தற்பொழுது இந்த தினம்  அனுசரிக்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தாமிரபரணி-படுகொலையை கண்டித்து தனது டுவிட்டர் பக்கதில் பின்வருமாறு கூறியுள்ளார்.

ஜூலை23 தாமிரபரணி_துயரம்: மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரியதற்காக காவல்துறையினரால் விக்னேஷ் என்கிற சிறுவன் உள்ளிட்ட 17பேர் கொல்லப்பட்டனர். அரசப்பயங்கரவாதக் கொடுமை ஒழிய அணிதிரள்வோம். உழைக்கும் மக்கள்ஒற்றுமையை வென்றெடுக்க உறுதியேற்போம்.


Share it if you like it