“திமுக பயங்கரவாதத்திற்கு துணைபோகிறது” திருப்பூரில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

“திமுக பயங்கரவாதத்திற்கு துணைபோகிறது” திருப்பூரில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தமிழக பா.ஜ.கவினர் திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பா.ஜ.கவினர் திருப்பூர் குமரன் சிலைக்கு முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க முக்கிய நிர்வாகி நாராயணன் “திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றன. அதனால் தான் அவர்கள் சட்டத்தை எதிர்க்கிறார்கள்” என காட்டமாக விமர்சித்தார். போராட்டத்தில் மேலும் பல முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Share it if you like it