திருப்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் !

திருப்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் !

Share it if you like it

கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இஸ்லாமிய பயங்கரவாதியான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்த SI அதிகாரியை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் நேற்று முன்தினம் டெல்லியில் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்தி உளவுதுறை அதிகாரியை கொன்று சாக்கடையில் வீசினர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கண்டித்தும், சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் ஊடுருவி இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களை வெளியேற்றகோரியும் திருப்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கோடி நாமாவளி பிரார்த்தனையையம் நடந்தது. அதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமண்யம் தலைமை வகித்தார்.


Share it if you like it