திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..!

திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு..!

Share it if you like it

வன்முறையை துாண்ட முயற்சிப்பதாக, திருமுருகன் காந்தி மீது, நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள், நேற்று காலை மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அப்புகார் மனுவில், ‘அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, தீர்ப்பை விமர்சித்து பேசியுள்ளார்.மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய இவர் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்


Share it if you like it