தொடரும் திமுகவின் வன்மம் நிறைந்த பேச்சு புதிய சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ- அன்பழகன்!

தொடரும் திமுகவின் வன்மம் நிறைந்த பேச்சு புதிய சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ- அன்பழகன்!

Share it if you like it

பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பிச்சை போட்டதே திமுக தான்  என்று ஆர்.எஸ். பாரதி இழிவுப்படுத்தி பேசியிருந்தார். சமீபத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதை தமிழர்கள் இன்று வரை மறக்கவில்லை.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு நிவாரண பொருட்களை ஏழை பெண்ணிடம் தூக்கி போட்டு மிரட்டிய காணொலி மக்களின் மனதை கடுமையான ரணத்தை ஏற்படுத்தி  இருந்தது. அதே போன்று பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் என்னும் எம்.எல்.ஏ அம்பட்டன் கடை என்று முடி திருத்தும் நபர்களை இழிவுப்படுத்தி பேசியதை ஊடகங்கள் வைரலாக்கியது.

தற்பொழுது திமுக எம்.எல்.ஏவின் தொலைபேசி உரையாடல் பதிவு தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.  திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் சற்று நாட்களுக்கு முன்பு  பாஜகவில் இணைந்தார்.

அதுகுறித்து எம்.எல்.ஏ அன்பழகன் உரையாற்றும் பொழுது. மொத்தமாக சொல்ல இது என்ன? வண்ணானுக்கு துணி போடும் கதையா இது என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தி பேசியிருப்பது தமிழகம் முழுவதும் திமுக மீது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it