தொண்டர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைமை உத்தரவு

தொண்டர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைமை உத்தரவு

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் தன் கட்சி;தொண்டர்களுக்கு அறிக்கை வாயிலாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஊரடங்கு உத்தரவால், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பது, பிரதமரின் சீரிய நோக்கம்.
தொண்டர்கள் ஒவ்வொருவரும், தினமும், ஐந்து ஏழை, எளியோருக்கு உணவளிக்க வேண்டும். இதனால், தினமும் ஐந்து கோடி பேர், பசியிலிருந்து மீட்கப்படுவர். ஏப்., 14 வரை, இதை செய்ய வேண்டும். மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து, நம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்து, இந்த கொடிய நோயை தோற்கடிப்போம்; மனித உயிர்களை பாதுகாப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Share it if you like it