நக்சல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தவருக்கு இரங்கல் தெரிவிக்க ஓடிய தமிழக முதல்வர் கார்கில் தியாகிகளை மறந்தது ஏன்?

நக்சல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தவருக்கு இரங்கல் தெரிவிக்க ஓடிய தமிழக முதல்வர் கார்கில் தியாகிகளை மறந்தது ஏன்?

Share it if you like it

இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக், தாலிபான் பயங்கரவாதிகளால்  சுட்டு கொல்லபட்ட பொழுது மற்றும் நகர்ப்புற நக்சல் என்று பலரால் அழைக்கப்பட்ட ஸ்டேன்ஸ் சுவாமி மரணம் அடைந்த பொழுது உடனே தனது ஆழ்ந்த இரங்கலை தமிழக முதல்வர் உட்பட பல சில்லறை போராளிகள் தெரிவித்து இருந்தனர்.

பாரதப் பிரதமர் மோடி, ஜனாதிபதி, உட்பட நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் கூட கார்கில் தியாகிகளின் வீரத்தை போற்றி வருகின்றனர். தேச நலனுக்காக தங்கள் இன்னுயிரை தந்த கார்கில் தியாகிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு மிக அருகில் உள்ள புதுச்சேரி கூட தமது தேச உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் விடியல் கட்சியின் தலைவர் ஸ்டாலின் இது குறித்து எல்லாம் பேசாமல் இருப்பது வெட்க கேடான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it