நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் அதிரடி..! 

நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் அதிரடி..! 

Share it if you like it

வருமான வரி மீதான வட்டியை செலுத்த தடை கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.

2007,2008,2009, நிதி ஆண்டுக்கான வருமான வரி ரூ. 3.11 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நடிகர் சூர்யாவிற்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

3 வருடங்களுக்கு பிறகு வருமான வரி கணக்கிட்டு வசூலிக்கப்பட்டதால் வட்டியை வசூலிக்க தடை கோரி நடிகர் சூர்யா வழக்கு தொடர்ந்தார். வருமான வரி மதிப்பீட்டிற்கு நடிகர் சூர்யா ஒத்துழைப்பு கொடுக்காததால். வட்டி விலக்கு பெற உரிமையில்லை என்று வருமான வரித்துறை தனது தரப்பு வாத்தை முன் வைத்தது இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம் சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்து  நீதிபதி எஸ்.எஸ். சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ; பாலிமர்


Share it if you like it