நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை இஸ்லாமியர்களுக்கு  சீமான் அறிவுரை!

நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை இஸ்லாமியர்களுக்கு சீமான் அறிவுரை!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரில் சிறு சிறு குழுக்களாக அங்கொன்று இங்கொன்றுமாகவும் தங்கள் மதகுருமார்கள், பெரியவர்களின் அறிவுரையையும் மீறி  இஸ்லாமியர்கள்  அர்தமற்ற ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்து வரும் இடத்திற்கு சென்ற  சீமான் வழக்கம் போல் தனது பித்தலாட்ட பேச்சின் மூலம் நாட்டிற்கு எதிராகவும் நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை. இதனை ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டும், என்று  இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது மட்டுமில்லாமல் பாபர் தீர்ப்பு வழங்கிய  உச்சநீதிமன்றத்தை  கடுமையாக விமர்சித்தும்.

காஷ்மீர் தனி நாடு அதனை இந்தியாவில் இனணத்தது தவறானது என்று கூறியதுடன். இறுதியாக பேசிய சீமான் உங்களுக்காக நான் எவ்வளவு ஆதரவாக பேசி வருகிறேன் நீங்கள் எனக்கு ஒட்டு போடுவதில்லை, என்று மறைமுகமாக அவர்களை திட்டியதை பெரும் ஆரவாரத்துடன் சீமானுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் சிரித்ததும். தவறான  கருத்தினை பரப்பி  அவர்களின் உணர்வை தூண்டி கலவரம் ஏற்பட முயற்சி செய்கிறாறோ என எண்ண தோன்றுவதாக மக்கள் கருதுகின்றனர்.

 


Share it if you like it