நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

Share it if you like it

மஹாராஷ்டிராவில் நாளை மாலை ஐந்து மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கெடுப்பு நடைபெறுவதை வீடியோ எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றது, செல்லாது என எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதனை விசாரித்த நீதிபதி ரமணா தலைமையில அமர்வு நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக மஹாராஷ்டிராவில் நடைபெற்றுவந்த அரசியல் சதுரங்கம் முடிவுக்கு வந்துள்ளது.  


Share it if you like it