குற்றவாளிகள் சுட்டுக்கொலை

குற்றவாளிகள் சுட்டுக்கொலை

Share it if you like it

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

Share it if you like it