நேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா…! கதறும் அப்பாவி மக்கள்….! பதுங்கும் பிரதமர் கே. பி. ஓலி…!

நேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா…! கதறும் அப்பாவி மக்கள்….! பதுங்கும் பிரதமர் கே. பி. ஓலி…!

Share it if you like it

உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தை கம்யூனிஸ்ட் நாடாக காங்கிரஸ் துணையுடன் சீனா மாற்றியது. இதனால் தற்பொழுது அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் சுதந்திரம் பறிபோனதோடு மட்டுமில்லாமல் நேபாள காவல்துறையினரை சீனர்கள் கடுமையாக தாக்கும் காணொலியையும் யூடிப் வலைத்தளத்தில் நாம் காண முடியும்.

நேபாளத்தின் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததோடு மட்டுமில்லாமல் அது தனது பகுதி என்று கூறி. நேபாள மக்களை சீன ராணுவத்தினர் விரட்டுவது நேபாள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட் நேபாள பிரதமர் கே.பி ஓலி சீன பெண் தூதரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சீனா செய்யும் அட்டூழியங்களை பிரதமர் கண்டு கொள்ளவில்லை என்று அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் அதிகாரப்பூர்வ மொழி வலுக்கட்டாயமாக நேபாளத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it