பட்டியல் இன மக்களை அவமானப்படுத்திய ஆர்.எஸ் பாரதிக்கு முட்டு கொடுக்கும் கம்யூனிஸ்ட்!

பட்டியல் இன மக்களை அவமானப்படுத்திய ஆர்.எஸ் பாரதிக்கு முட்டு கொடுக்கும் கம்யூனிஸ்ட்!

Share it if you like it

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் நடைபெற்ற ஒர் நிகழ்ச்சியில்  பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் இன்று நீதிபதிகளாகவும், உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கவும் முக்கிய காரணம் எங்கள் கட்சி போட்ட பிச்சை என்று மிக கீழ்தரமாக விமர்சனம் செய்திருப்பதை. வழக்கம் போல் அதன் கூட்டணி கட்சிகள் இன்னும் பிற இயக்கங்கள் எதுவும் தங்கள் கண்டனத்தையோ, ஆர்பாட்டத்தையோ, பதிவு செய்யமால் இருப்பதை கண்டு பட்டியல் இன மக்களிடையே  அதிர்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் கலந்துக்கொள்ளும் அருணன்   இதற்கு தனது  கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பையோ பதிவு செய்யாமல் இருப்பது வெட்ககேடான செயல் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடு என்று கருதப்படும்  தீக்கதிரில் ஆர்.எஸ் பாரதிக்கு உலகில் இதுவரை யாரும் கொடுக்கதா வகையில் அவரின் பழைய பேச்சை மறந்துவிட்டு  மாற்றுதிறனாளிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு என்ற கருத்திற்கு மிக சிறந்த முறையில் முட்டு  கொடுத்திருப்பது மக்களிடையே கடும் சிரிப்பலையை  ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it