பத்ம ஸ்ரீ விருது வாங்கிய நபர் கொரோனா நோய் தொற்றால் இன்று காலமானார் !

பத்ம ஸ்ரீ விருது வாங்கிய நபர் கொரோனா நோய் தொற்றால் இன்று காலமானார் !

Share it if you like it

  • சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து 62 வயதான சீக்கிய மதத்தை சேர்ந்த பாய் நிர்மல் சிங் என்பவர் பஞ்சாபிற்கு வந்தார். மார்ச் 30 ம் தேதி மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக அவர் குரு நானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
  • மேலும் புதன்கிழமை மாலை அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாகவும், அவர் வென்டிலேட்டர் ஆதரவுக்கு மாற்றப்பட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுஜாதா சர்மா தெரிவித்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 4:30 மணிக்கு இறந்தார், என்று அவர் கூறினார். இவர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் கீர்த்தனைகளை பாடக்கூடியவர் மற்றும் பத்ம ஸ்ரீ விருதும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it