பாகிஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி ரெடி..!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி ரெடி..!

Share it if you like it

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வெட்டுக்கிளிகள் திரள்களாக பல இடங்களில் காணப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் கடற்கரை பகுதிகளில் இருந்து இவை வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் நகரத்தின் பல பகுதிகளில் வானில் வெட்டுக்கிளிகள் பெருந்திரளாக நிறைந்து காணப்படுகின்றன. வீடுகள், சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெட்டுகிளிகள் திரள்களாக காணப்படுவதால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் சிந்த் மாகாண அமைச்சர் முகமது இஸ்மாயில் வெட்டுக்கிளிகளின் தொல்லையில் இருந்து மக்கள் தப்பிக்க ஒரு விநோதமான யோசனையை கூறியுள்ளார்.

“பொது மக்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளை பிடித்து சுவையான பிரியாணி முதலிய உணவுகளை தயார் செய்யுங்கள். மக்களுக்கு உணவாக மாறுவதற்காகத் தான் இந்த பூச்சிகள் இங்கே வந்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.


Share it if you like it