பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க…! இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட காணொலி…!

பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க…! இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட காணொலி…!

Share it if you like it

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று  அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாகும்.

காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்ட பிரிவை நீக்கி நாளையோடு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது. இதனை மத்திய அரசு சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் ஆகஸ்ட் 5-ம் நாளை கறுப்பு தினமாகவும், காஷ்மீர் குறித்து காணொலி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து இந்தியாவின் சார்பில் காணொலி ஒன்று வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it