பாக்.., தீவிரவாதிகளின் புல்வாமா PART-2 வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம்!

பாக்.., தீவிரவாதிகளின் புல்வாமா PART-2 வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம்!

Share it if you like it

புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்தியது இந்தியாவை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. இதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமணம் அடைந்தனர்.

அதே போன்று ஒரு சம்பவத்தை நிகழ்த்த வெடிகுண்டு நிறைந்த காருடன் ஒரு பயங்கரவாதி உங்கள் பகுதியை நோக்கி வருகிறான் என்று புல்வாமா போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து உஷார் ஆன ராணுவம் சந்தேகத்திற்கிடமான கார் எல்லை பகுதியை நெருங்கும் பொழுது ராணுவ வீரர்கள் சுட ஆரம்பித்தனர்.

இதனை அடுத்து கார் ஓட்டி வந்த தீவிரவாதி இருளை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒடிவிட்டான். இதனை அடுத்து ​​வாகனத்தை சோதனை செய்த பிறகு அதன் பின்புற இருக்கையில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி இருப்பது தெரியவந்தது. அதன் பின் அக்காரை ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக  செயல் இழக்க செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it