பிணமாக தொங்கிய எம்.எல்.ஏ…! பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறதா மேற்கு வங்கம்?..! மெளனம் காக்கும் மம்தா பேனர்ஜீ…!

பிணமாக தொங்கிய எம்.எல்.ஏ…! பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறதா மேற்கு வங்கம்?..! மெளனம் காக்கும் மம்தா பேனர்ஜீ…!

Share it if you like it

மத்திய அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமலும், தன் விருப்படி அராஜக அரசியல் செய்ய கூடியவர் மம்மதா பேனர்ஜீ என்று மேற்கு வங்க முதல்வர் மீது மக்கள் கடுமையான குற்றச்சாட்டை இன்று வரை கூறி வருகின்றனர்.

அம்மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தவர் ஒருவரின் உடலை கயிற்றில் கட்டி துளியும் மனிதாபிமானம் இல்லாமல் இழுத்து செல்லும் காணொலி அண்மையில்  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மம்தா பேனர்ஜீ அரசு கொரோனா ஓழிப்பில் தோல்வி அடைந்து விட்டது தயவு செய்து எங்களை மத்திய அரசு காக்க வேண்டும் என்று அம்மாநில மக்களே குரல் எழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் மேற்கு வங்கம் தினாஜ்பூர் மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தேடுக்கப்பட்டவர் தேபேந்திர நாத் ரே இன்று தனது வீட்டின் அருகில்  தூக்கிலிடப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவும் பொழுது நாங்கள் எப்படிப்பட்ட பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறோம் என்று மேற்கு வங்க மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட விரோத குடியேறிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் மம்தா பானர்ஜி அரசு

Share it if you like it