பின்வாசல் முதல்வரே ராஜினாமா செய்து வெளியேறு – காங்கிரஸ் எம்.எல்.ஏ

பின்வாசல் முதல்வரே ராஜினாமா செய்து வெளியேறு – காங்கிரஸ் எம்.எல்.ஏ

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்  பாண்டிச்சேரியும் ஒன்று, இங்கு முதல்வராக நாராயண சாமி இருக்கிறார். இவர் பல தில்லாலங்கடி வேலை செய்து முதல்வர் பதவிக்கு வந்து விட்டார். இதற்கு முன்னால் பல குரளி வித்தை காட்டியவர்களுக்கு இவர் மீது கடும் ஆத்திரம் இருந்தது.  இந்நிலையில் முதல்வர்  பதவிக்கு இலை போட்டு அமர்ந்திருந்த ஒரு முக்கிய நபரின், இலையில் பாயாசத்திற்கு பதில் இவர் வரவால் மண் விழுந்தது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் அவ்வபொழுது முதல்வரை, வண்டு முருகன் ரேஞ்சுக்கு பட்டும் படாமலும் கலாய்ப்பது என நிகழ்ந்த வண்ணம் இருந்தது. இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ தனவேலு மக்களுக்கான நலத்திட்டங்களை, செயல்படுத்த முதல்வரால் முடியவில்லை  அவர் பின்பக்க கதவின் வழியே  வந்த முதல்வர். எனவே அவர் ராஜினாமா செய்யவும்  திறமையான ஒருவருக்கு வழி விடவேண்டும்  என காலில் சலங்கை கட்டி ஆடியிருப்பது அக்கட்சியில் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it