பிரதமரை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்எல்ஏ மீது புகார் அளித்த பாஜக நிர்வாகிகள்  !

பிரதமரை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்எல்ஏ மீது புகார் அளித்த பாஜக நிர்வாகிகள் !

Share it if you like it

  • இரண்டு நாட்களுக்கு முன் பாரத பிரதமர் மோடி அவர்களின் நற்பெயருக்கும் புகழக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தனது முகநூலில் பக்கத்தில் கொரோனா வைரசையும் மோடி அவர்களையும் ஒப்பிட்டு கார்டூன் போட்டு ‘ கோ பேக் மோடி’ நாட்டை அழிக்கும் வைரஸ் என பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த லட்சக்கணக்கான பொதுமக்களும் எங்களை போன்ற கட்சிகார்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொது மக்கள் மத்தியில் பாரத பிரதமரின் நற்பெயருக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது.
  • ஆகவே வேண்டுமென்று திட்டமிட்டு முகநூலில் பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பிய பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கண்டித்து வருகிறார்கள். இது குறித்து திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது பா.ஜ.க மாநில வழக்கறிஞர் அணி செயலாளரும்,குமரி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார் நடவடிக்கை எடுக்ககோரி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Share it if you like it