புதுவையில் ஆட்சி கவிழும் அபாயம் தி.மு.க கூட்டணி காரணமா..?

புதுவையில் ஆட்சி கவிழும் அபாயம் தி.மு.க கூட்டணி காரணமா..?

Share it if you like it

தி.மு.க உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.. நாராயணசாமியின் அராஜகத்தை பொறுத்து கொள்ள முடியாமல்.. அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ  தீப்பாய்ந்தான் தங்கள் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்து புதுவை முதல்வருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தனர்..

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், திமுக வெற்றி பெறாவிட்டால் நான் தற்கொலை செய்து விடுவேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அண்மையில் கூறி இருந்தார்..

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்நேரமும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இதன் பின்னணியில் தி.மு.க கூட்டணி இருக்குமோ? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it