பூச்சி மருந்து போடும் தேனீக்கள்!

பூச்சி மருந்து போடும் தேனீக்கள்!

Share it if you like it

தக்காளி, ஸ்ட்ராபெரி, புளூபெரி, சூரியகாந்தி போன்ற பணப் பயிர்களுக்கு, பூஞ்சைகள் ஒரு பெரிய சவால். பாட்ரைடிஸ் எனப்படும் பூஞ்சைகள் செடியில் வந்துவிட்டால், பழங்கள் மீது சாம்பல் நிறத்தில், ஒரு படலம் ஏற்பட்டுவிடும்.
இதை தவிர்க்க, தேனீக்கள் மூலம், சி.ஆர்-., 7 என்ற பூஞ்சைக்கொல்லியை செடிகளுக்கு செலுத்தலாம் என்று, ‘பீ வெக்டாரிங் டெக்னாலஜீஸ்’ பரிசோதனை செய்தது.
வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும் தேனீப் பெட்டிகளில், தேனீக்கள் கிளம்பும் பகுதியில் ஒரு தட்டை வைத்து, அதில், சி.ஆ-., 7 பொடியை துாவி விடுவது.
அதன் மீது தேனீக்களின் கால்கள் படும்போது, பொடி ஒட்டிக் கொள்ளும். பின், தேனீ செடிகளில் போய் அமரும்போது, பூஞ்சைக்கொல்லி பொடியும் உரிய இடங்களில் துாவப்படும்.
சோதனைகளின்போது சிலவகை பழங்களில், பூஞ்சை நோய் தடுக்கப்பட்டதோடு, அவை நல்ல விளைச்சலையும் தந்தன. சி.ஆர்-., 7 பொடிகள் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், அவை தேனீக்களுக்கு கேடு விளைவிக்காது.
நச்சுள்ள வேதிப் பொருட்களைக் உடைய பூச்சிக்கொல்லி மருந்துகளால், தேனீக்கள் இனமே அழியும் நிலைக்கு வந்துவிட்டன.
இந்தத் தருணத்தில், தேனீக்களை கொண்டே பூஞ்சைக்கொல்லியை தயாரித்திருப்பதால், இதை பயன்படுத்த, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, உடனே அனுமதி அளித்துள்ளது.


Share it if you like it