பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது!

பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது!

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது,அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பற்றியும் இந்து தெய்வமான ராமரை பற்றியும் வன்முறை தூண்டும் விதமாக பேசினார்.
இதனால் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் காவல் துறையில் அவரை கைது செய்ய புகார் அளித்தனர்.மேலும் பாஜக வின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் முன் போராட்டம் நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் உள்ள நெல்லை கண்ணன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது என தகவல் வெளியாகி உள்ளது.


Share it if you like it