பொது அமைதிக்கு விரோதமாக பேசிய அய்யாவழி யுக பேரவை தலைவர் கைது!

பொது அமைதிக்கு விரோதமாக பேசிய அய்யாவழி யுக பேரவை தலைவர் கைது!

Share it if you like it

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக ஒருபுறமும், எதிராக மறுபுறமும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை அனுமதி வழங்கி வருகிறது. அய்யா வழி யுக பேரவை தலைவர் பால முருகன் என்பவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கோவை செல்வபுரம் அனைத்து ஜமாத்துகள் ஏற்பாடு, செய்திருந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இதனை அடுத்து பால முருகன் மீது, சிலர் காவல்துறையிடம் தேச ஒற்றுமைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில், அநாகரீகமாக பேசிய அவரை கைது செய்ய, வேண்டும் என்று புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, செய்து  கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Share it if you like it