மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தவருக்கு-கடிதம் எழுதிய மோடி!

மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தவருக்கு-கடிதம் எழுதிய மோடி!

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  டோம்ரி கிராமத்தில் வசிப்பவர், மங்கல் கெவாட் என்னும் கைவண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவர் தனது மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடி கலந்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமரின் டெல்லி அலுவலகத்திற்கும்  வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் தனது  நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் கடிதம் எழுதியிருந்தார்.

கெவாட் மகளின் திருமணத்தில் மோடி கலந்துக்கொள்ளவில்லை என்றாலும் அவரின் அழைப்பிற்கு  பதில் அளித்த மோடி  தம்பதியினரின் புதிய வாழ்க்கைக்கு தனது அன்பான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக  அக்கடிதத்தில் கூறியிருந்தார். இது அவரின் குடும்பம் மட்டுமில்லாது  டோம்ரி கிராமத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.  பிரதமர் மோடி டோம்ரி கிராமத்தை தத்து எடுத்துக்கொண்ட கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


Share it if you like it