மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தும்  சேவாபாரதி !

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்த்தும் சேவாபாரதி !

Share it if you like it

  • கொரோனா நோய் கட்டுப்பாடுகளால் பசியோடு இருப்பவர்களுக்காக  சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு, தாம்பரம் மாவட்டம் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
  • உணவு வழங்க வேண்டாம் என்று காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் பட்டியல் எடுத்து அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சேவாபாரதியின் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் இதை கவனித்து வருகிறார்கள்.
  • திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகைபேர், சிதம்பரம், மற்றும் சேவாபாரதி அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியை சுற்றியுள்ள நேரு பூங்கா, சாஸ்திரி நகர், புல்லாபுரம் மக்களுக்கு நேற்றும் இன்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
  • சென்னையில் புரசைவாக்கம், துரைப்பாக்கம் அருகிலுள்ள கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் துப்புறவு தொழிலாளிகளுக்கு முகக் கவசமும் கொடுக்கப்பட்டன. இன்னும் பல பகுதிகளில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it