மண்ணில் நீடித்து நிற்கும் மனிதத் தன்மை!

மண்ணில் நீடித்து நிற்கும் மனிதத் தன்மை!

Share it if you like it

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியோடு சுற்றி திரிந்து கொண்டு இருந்த யானைக்கு அண்ணாச்சி பழத்தில் சில நபர்கள் பட்டாசையும் சேர்த்து வழங்கியுள்ளனர். ஆவலோடு பழத்தை உண்ட யானையின் வாயில் பட்டாசு வெடித்து  கடுமையான காயத்தை ஏற்படுத்தியது.

வலி பொறுக்க முடியாத அந்த கர்ப்பிணி யானை அருகில் உள்ள குளத்தில் இறங்கி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது. தவறு செய்தவர்களை மட்டும் கண்டிக்க வேண்டிய மனிதர்கள் ஒட்டு மொத்த மனித இனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது ஏற்புடையது அல்ல என்பது பலரின் கருத்தாக உள்ளது.

இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே தவறு செய்தவர்களை மட்டும் கண்டிப்போம்..! தண்டிப்போம்..! மனித இனத்தை விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்..!


Share it if you like it