மண் பானைக்குள் ஓர் மக(ரு)த்துவம்!

மண் பானைக்குள் ஓர் மக(ரு)த்துவம்!

Share it if you like it

 

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,
வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது
மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு
குளிரச் செய்யும்.

வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால்
மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே
குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்
பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது
என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?

மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.

மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே
இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்
பானைகளின் வெளியே முத்து முத்தாய்
வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள்
இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள்
வழியேதான் இப்படி நீர் கசிகிறது.
இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே
இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும்,
பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள
வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம்
வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த
நிலையிலேயே இருக்கிறது.

வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும்,
நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.
பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம்
அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக
நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.
ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால்
பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக
மாறுகிறது.

பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும்
காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று
ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும்
இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு
குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த
அளவே குளிர்ச்சி அடைகிறது.

இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை
வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி
ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை
நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை
குளிர்விக்காது.

ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும்
என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்
5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான்
குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி
செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின்
வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

“சத்துகளுடன், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியவை இயற்கை உணவுகள். அவற்றை முறையாகச் சமைத்து உண்ணும்போது அதன் முழுச்சத்தும் நம் உடலுக்குக் கிடைக்கும்.  மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.  இப்போது கிடைக்கும் பாத்திரத்தில் உலோகத்தன்மை இருப்பதால், உணவின் தன்மையை மாற்றிவிடுகிறது.

பொதுவாக, உணவைச் சமைக்கும்போது, உணவில் உள்ள தாதுக்கள் உள்ளிட்ட முக்கியமான சத்துகள் ஆவியாகிவிடும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll) எளிதில் ஆவியாகிவிடும். ஆனால், மண்பானையில் சமைக்கும்போது. அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.

மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. அது உணவுக்குத் தேவையான எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம்.

நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும். குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும். உடல் சூட்டைத் தணிக்கும். இப்படி மண்பானையின் மகத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது”

 


Share it if you like it