மதுவால் ஏற்படும் தீமைகளை தெளிவாக விளக்கும் பாரதிய மஸ்தூர் சங்கம் அமைப்பு செயலாளர் !

மதுவால் ஏற்படும் தீமைகளை தெளிவாக விளக்கும் பாரதிய மஸ்தூர் சங்கம் அமைப்பு செயலாளர் !

Share it if you like it

கொரோனா நெருக்கடி காலத்திலும் பாதிப்புகளை மறந்து அரசு மதுக்கடைகளைக் திறக்க வலியுறுத்தியுள்ளது. மது குடிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி மிக தெளிவாக பாரதிய மஸ்தூர் சங்கம் அமைப்பு செயலாளர் எஸ்.துரைராஜ் விளக்கியுள்ளார்.

மதுவால் ஏற்படும் தீமைகள் :

  • பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு
  • குடும்ப அமைதி கெடுதல்
  • உடல்நலம் பாதித்தல்
  • பொருளாதார இழப்பு
  • வேலைக்கு செல்லாதிருத்தல்

குடும்ப அமைதி கெடுதல் :

மது அருந்தி தன்னிலை இறப்பதால் தாய் தந்தை மனைவி குழந்தைகள் இடமிருந்து தனித்திருத்தல்.

விளைவு : அவர்களின் அன்பை இழத்தல் நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல் குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழிதவறுதல்
மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை மேலும் இத்தகைய குடும்பங்களில் சில சிறுவர்களில் மதுபழக்கதிற்கு அடிமையாவது.

உடல்நலம் பாதித்தல் :

  • தொடர்ந்து மது அருந்துவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்புத்தளர்ச்சி, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் 200 வகையான நோய்கள்

விளைவு : மஞ்சல் காமாலை உள்ளிட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்படுதல், ஆண்மை இழத்தல் சமூகத்தில் மதிப்பிழத்தல், பொருளாதார ரீதியிலான இழப்பு.

  • ஒருவர் [40 வயதானவர்[ கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் – 60 வயது வரை வாழ்ந்தால் மொத்தம் 40 வருடம். மது அருந்துதல் சரியா சராசரியாக :-

ஒரு நாள் செலவு – ரூ. 200
ஒரு மாத செலவு – ரூ. 6000
ஒருவருட செலவு – ரூ. 72,000
40 வருடங்களுக்கு – ரூ. 28,80,000

  • நோய்வாய்ப் படுவதால் குறைந்தபட்ச சிகிச்சை செலவு [வாழ்நாள் முழுமைக்கும்] – 2,00,000

மொத்தம் : 28,80,000 + 2,00,000 = ரூ.30,80,000

  • ஆக 20 வயதில் ஒருவர் மது அருந்த தொடங்கினால் 40 வருடங்களுக்கு [விலை உயர்வு உட்பட] ரூ.40 லட்சம் இழப்பு ஏற்படும்.

வேலைக்கு செல்லாதிருத்தல் :

  • உடல் நலிவாலும் மன உளைச்சலாலும் மாதத்தில் பத்து முதல் பதினைந்து நாட்கள் மட்டும் வேலைக்குச் செல்லுதல். [ 5 நாட்கள் விடுமுறை என கொள்வோம்]

மீதி 10 நாள் கூலி இழப்பு சராசரியாக – ரூ.5,000

ஒரு வருடத்திற்கு – ரூ.60,000

40 வருடத்திற்கு – ரூ.24,00,000

ஆக மதுவிற்காகும் செலவு – ரூ.30,80,000 + 24,00,000 = 54,80,000

  • இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் பேரதிர்ச்சி கலந்த பிரமிப்பூட்டும் நஷ்டம் ஏற்படுவதை காணலாம்.

அவையாவன :

ஒவ்வொரு மாதமும் குடிப்பதற்கான செலவு – ரூ. 6,000

ஒவ்வொரு மாதமும் வேலை இழப்பால் வருமான நஷ்டம் – ரூ. 5,000

ஒரு மாதத்திற்கு மொத்தம் – ரூ.11,000

40 வருடத்திற்கு 480 மாதங்கள்

  • ஒவ்வொரு மாதமும் ரூ.11,000 -ஐ Monthly recording deposit scheme முறையில் FD செய்தால் 480 மாதங்களுக்கு கிடைக்கும் தொகை – ரூ.2,18,38,484 [6 சதவிகித வட்டி]

வாழ்நாள் முழுமைக்கான குறைந்தபட்ச சிகிச்சை செலவு – ரூ.2,00,000

எனவே மொத்தம் – ரூ.2,20,38,484

இரண்டு கோடியே 20 லட்சத்து 38 ஆயிரத்து 484 ரூபாய்

நன்மை [ மதுவால் அரசிற்கு கிடைக்கும் வருவாய் ]

  • 14.03.2020 மார்ச் அன்று அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களின் அறிக்கையின்படி எதிர்பார்ப்பு
    நிதியாண்டு 2019-20-ல் ரூ.31,000 கோடி

2020 பிப்ரவரி 29 வரை கிடைத்த வருமானம் ரூ.28,839.08 கோடி

இந்த இழப்பை ஈடுகட்ட வழி :

  • தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடி இதில் 1 கோடி பேரை தவிர்த்து ஏனைய 5 கோடி பேரிடம் ‘தமிழக மக்கள் நலவாழ்வு நிதி’ என பெயரிட்டு மாதம் ரூ. 50 வசூல் செய்தால் வருடத்திற்கு ரூபாய் 3,000 கோடி கிடைக்கும்.
  • இதற்காக பெரிய அளவில் பிரச்சாரம் தேவைப்படும். ‘மாதம் 50 ரூபாயா அல்லது சீரழியும் தமிழகமா’ என்கிற கேள்வியை முன்வைத்தால் நிச்சயமாக மக்கள் இதை விட அதிக நிதி அளிப்பர்.
  • APL கார்டு உரிமையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்ய வேண்டும்
  • தொழில் நிறுவனங்களிடம் வருமானத்திற்கு ஏற்ப இதே கோரிக்கையை முன்வைத்து வசூல் செய்யலாம்
  • இவை குறிப்பிட்ட சில காலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடியவை
  • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம்
  • மணல் குவாரிகளில் திருட்டை தடுப்பது
  • தென்னை, பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி விவசாயிகளை அனுமதித்தல், இதனை பதப்படுத்தி பாக்கெட் முறையில் விற்பனை செய்யலாம் இதற்கு 30 சதவிகிதம் வரை வரி வசூலிக்கலாம்.
  • பொருளாதார நிலை மேம்படும் வரை மிகவும் அத்தியாவசியமானவர்களுக்கு மட்டும் இலவசங்கள் வழங்குவது
  • 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அளித்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாய பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வருவாயைப் பெருக்குதல்.

[வேலைத்திறனை உறுதிப்படுத்துவது அவசரம் ]

தவிர,

  • சமய பெரியோர்கள், அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் தொழிற்சங்கங்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினை அமைத்து அரசிற்கான வருமானத்தை உயர்த்துவது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தலாம்.
  • 50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவில் இருந்து காக்க ஆண்டவன் அளித்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

Share it if you like it