மதுவை குடித்தால் கொரோனா அழியும் – மதுக்கடை திறக்கக்கோரி முதல்வருக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்எல்ஏ !

மதுவை குடித்தால் கொரோனா அழியும் – மதுக்கடை திறக்கக்கோரி முதல்வருக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்எல்ஏ !

Share it if you like it

  • ராஜஸ்தானின் சங்கோடில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் சிங் குண்டன்பூர் என்பவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது கடிதத்தில் கொரோனா வைரஸை ஆல்கஹால் கைகளை கழுவுவதன் மூலம் அகற்ற முடியுமானால், மது அருந்தினால் நிச்சயமாக தொண்டையில் இருந்து வைரஸ் நீங்கும் என்று எழுதியுள்ளார்.
  • கொரோனா வைரசால் மதுபான கடைகளை அரசு மூடியுள்ளது இதனால் மக்கள் திருட்டுத்தனமாக மதுவை வாங்கி குடிக்கின்றனர். எனவே மதுபான கடைகளை திறக்க கோரி அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவமான பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஒரு எம்எல்ஏ வாக இருந்துகொண்டு இதுபோல் பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்வது அபத்தமானது. கொரோனா நெருக்கடி காலங்களில் மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களை தராமல் மதுபானத்தை பரிந்துரைக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ வுக்கு மூளை இருக்கிறதா என்று நெட்டிசன்கள் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it