மத்திய அரசின் நடவடிக்கை குறித்து டாக்டர் ராமதாஸ் திடீர் கருத்து…!

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து டாக்டர் ராமதாஸ் திடீர் கருத்து…!

Share it if you like it

மத்திய அரசு பப்ஜி உட்பட 118-சீன செயலிகளுக்கு இன்று தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதிலுமிருந்து, மத்திய அரசின் நடவடிக்கைக்கு. பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

  • இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள்!
  • பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி!
  • பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்!

Share it if you like it