மராத்திய தீர்ப்பு நாளை காலை வரும்

மராத்திய தீர்ப்பு நாளை காலை வரும்

Share it if you like it

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து வந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன்தினம் பா.ஜ.க அதிரடியாக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை விவாதம் துவங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் காரசார வாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share it if you like it