முதல்முதலாக அமலுக்கு வந்தது நெல்லை தூத்துக்குடியில்!

முதல்முதலாக அமலுக்கு வந்தது நெல்லை தூத்துக்குடியில்!

Share it if you like it

ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மாவட் டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட் கள் வாங்கி கொள்ளலாம். பின்னர் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.


Share it if you like it