முருகன் பெயரை கொண்ட குடும்பம்…! கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காதது ஏன்? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

முருகன் பெயரை கொண்ட குடும்பம்…! கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காதது ஏன்? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

Share it if you like it

தமிழ் கடவுள் முருகனை திமுகவின் கறுப்பர் கூட்டம் மிகவும் கீழ்த்தரமாக ஆபாசமாகவும், விமர்சனம் செய்தற்கு ஆன்மீக பெரியவர்கள், மற்றும் மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனால் முருகன் பெயரை கொண்ட திரை குடும்பமான நடிகர் சிவகுமாரோ அல்லது அவர்களது வாரிசோ இன்று வரை கறுப்பர் கூட்டத்தினரை கண்டிக்காமல், மெளனம் காத்தது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய செயலாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

EIA வரைவு மசோதா அறிக்கையை முழுமையாக படிக்காமல். வழக்கம் போல  மக்களை குழப்பியுள்ளார் சூர்யா மற்றும் கார்த்தி. அரசியல்வாதிகள் மட்டுமே தங்களின் லாபத்தை பார்த்து விட்டு பிறகே கருத்துக்களை தெரிவிப்பர். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, இதில் சாதகம், பாதகம் என்ன வென்பதை முழுமையாக ஆராய்ந்த பின்பே தங்களின் கருத்துக்களை கூறியிருக்க வேண்டும். ஆனால் திக, கம்யூனிஸ்ட்கள், பியூஸ் மானுஸ் போன்றவர்களின் கருத்துக்களை எடுத்து கொண்டு அறிக்கை அளிப்பது கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றர்.


Share it if you like it